Wednesday, May 22, 2013

Rangiyam karupar

அழகான ராங்கியக் கோயிலுள் குடிகொண்டு
அரசாள வந்த கருப்பன்
அடியடியின் வாழைபோல் எனது குலங்கோத்திரம்
அத்தனையும் காக்கும் கருப்பன்
மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாது
மெய்யாள வந்த கருப்பன்
முன்னோடி சப்பாணி இருவரையும் கொண்டிந்த
உலகாள வந்த கருப்பன்

புளியமரத் தடியில்வளர் பெரிய கருப்பண்ணனிவன்
கோவில் கொண்டாடு மனமே
புண்ணியத் தீர்த்தமும் புளியிலையும் பெற்றிட்டால்
புகழோடு வாழ்வு வருமே
கரியபெரு மீசையும் கையிலொரு அரிவாளும்
கருப்புநிறப் பட்டும் உடையான்
காலினில் சலங்கையுடன் காணக் கண்கூசவே
குதிரைமேல் ஏறி வருவான்

No comments:

Post a Comment